கோவை அடுத்துள்ள சரவணம்பட்டி போலீஸ் எல்லைக்கு உள்பட்ட கணபதி, ஐஸ்வர்யா நகரைச் சேர்ந்தவர் ஜெயா (வயது 60). பிஎஸ்என்எல்-தோலை தொடர்பு நிறுவனத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர் கடந்த வெள்ளிக்கிழமை காலை அவரது வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சரவணம்பட்டி போலீஸார் உரிய விசாரணை நடத்தி, இதுதொடர்பாக அந்த வீட்டில் தங்கி கட்டட வேலை செய்துவந்த செங்கல்பட்டைச் சேர்ந்த லோகநாதன் (வயது-51) என்பவரை கைது செய்தனர்.
இந்நிலையில், ஜெயாவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில், கொலைக்கு முன் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட லோகநாதனிடம் இதுகுறித்து போலீஸார் விசாரித்ததில், சம்பவத்தன்று, ஜெயாவை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட போது அவர் சத்தமிட்டதால் ஏற்ப்பட்ட மோதலின் போதுதான், நான் நைலான் கயிறால் அவரது கழுத்தை நெரிதேன், அப்போது ஜெயா மயக்கமடைந்து விட்டார், அதைத்தொடர்ந்து அவரை நான் பலாத்காரம் செய்தேன், அதன் பிறகு மயக்கமடைந்து கிடந்த ஜெயாவை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று லோகநாதன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
Filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், இந்தியா, உழவன்۞, காமம், செக்ஸ், செய்திகள், தகவல், Uncategorized |
பின்னூட்டமொன்றை இடுக