கடந்த 15ஆம் தேதி முதல் கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி அனந்த நாராயணனை காணவில்லை என அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் விஞ்ஞானியாக வேலை பார்ப்பவர் அனந்த நாராயணன் (வயது36). அங்கு கம்ப்யூட்டர் பிரிவில் இயக்குனராகவும் உள்ளார். மனைவி ருக்மணி மற்றும் 2 மகள்களுடன் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 15 ந் தேதி அணுமின் நிலையம் சென்ற இரவு 9 மணி வரை வீடு திரும்பாததால் அணுமின் நிலையத்திற்கு அவரது மனைவி போன் செய்து விவரம் கேட்டார்.
அனந்தநாராயணன் இன்று வேலைக்கு வர வில்லை என்று கூறினர். இதனால் ருக்மணி தெரிந்த இடங்களுக்கு போன் செய்து விசாரித்தார். ஆனால் அவரை காணாததால் யாரேனும் கடத்தி இருக்கலாம் என கருதி சதுரங்க பட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை ஏற்ற போலீசார் அனந்த நாராயணனை போலீசார் தேடி வருகின்றனர்.
பின்னூட்டமொன்றை இடுக